Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

 திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் திருச்சியில் நடைபெறுகிறது 

மார்ச் 01, 2021 12:56

திருச்சி  : வரும் 7 ம் தேதி திருச்சி சிறுகனூரில் திமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற உள்ள நிலையில் முழு வீச்சில் பணிகள் நடைபெற்று வருகிறது.

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் அருகே சிறுகனூரில் திமுகவின் 11 வது  மாநில மாநாடு 700 ஏக்கர் பரப்பளவில் வரும் 14 ம் தேதி நடைபெறவுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த மாநாட்டு பணிகள் கடந்த  பிப்ரவரி 22 ம் தேதி துவங்கி 10 நாட்களில் முடிக்க  திட்டமிட்டு பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.

  இந்த மாநாட்டில் தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு மாவட்டங்களிலிருந்தும்  5 முதல் 6 ஆயிரம் பேர் என மொத்தம் 7 லட்சத்திலிருந்து 10 லட்சம் தொண்டர்கள் பங்கேற்க திட்டமிட்டு இருந்தனர்.மிகப்பெரிய அளவில் செலவு செய்து மாநாட்டிற்கு தயாராக இருந்த நிலையில் தேர்தல் கமிஷன், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதுடன் திமுக மாநாடு நடத்துவது தடைபட்டது. 

மாநாடு தடைபட்டாலும், மாநாடு நடைபெறவிருந்த இடத்தில் தமிழக சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் வரும் மார்ச் 7 ம் தேதி நடத்துவதற்கான பணிகளை திமுகவினர் செயல்படுத்தி வருகின்றனர். இந்த கூட்டத்தில் சுமார் 5 லட்சம் பேர் பங்கேற்க உள்ளதாகவும், இதற்கான உரிய அனுமதியை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் பெற்று தான் செய்து வருகிறோம் என்கின்றனர் திமுக மூத்த நிர்வாகிகள்.

தலைப்புச்செய்திகள்